காணொலிக் காட்சி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறுகிறது.!!

சென்னை ஏப்: 15
திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருப்பதாவது ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கரோணா நோய்த் தொற்று குறித்து முதலமைச்சர் அமைச்சர்களுடன் மற்றும் அதிகாரிகளுடனும் ,தலைமைச் செயலர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன், மருத்துவ நிபுணர்களிடம் ,மத தலைவர்களுடனும் ஆலோசனை கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் கொடிய நோய் குறித்து இன்று நடைபெறும் வகையில் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் திமுக அந்த கூட்டத்தை நடத்த கூடாது என்று காவல்துறை மூலம் அதிமுக அரசு நோட்டீஸ் கொடுத்தது.
எனவே தனிமனித இடைவெளிவிட்டு அரசின் பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் திமுக சார்பில் உறுதி மொழி அளிக்கப்பட்டும் சென்னை மாநகர காவல்துறை திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது .
நோய் தடுப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதிமுக அரசு பிடிவாதமாக செய்வது போல் ஜனநாயக நெறிகளுக்கு முரணாக அரசியல் செய்ய திமுக சிறிதளவும் விரும்பவில்லை.
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நலன் சார்ந்த பிரச்சினை குறித்து திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனவே நாளை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அனைத்து கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.